தானிய வகைகளை ஊக்குவிக்கும் வகையில் குன்னூரில் உணவுத் திருவிழா நடைபெற்றது.
குன்னூர் நகரில் தற்பொழுது மாரியம்மன் கோயில் தேர் திருவிழா நடைபெற்று வருகிறது.
இவ்விழா ஒரு மாதம் நடைபெறும். இன்று நடைபெற உள்ள திருத்தேர் உற்சவத்தை
முன்னிட்டு, குன்னூர் தனியார் அரங்கில் நடைபெற்ற உணவு திருவிழாவில், கேழ்வரகு
அடை, கேழ்வரகு களி, சேனைக்கிழங்கு வடை, மசாலா மோர், வெஜிடபிள் கோலா, சத்து
மாவு, இனிப்பு பலகாரம், கருப்பட்டி லட்டு/ சுகி உருண்டை, பாசிப்பயிறு உப்புமா,
உட்பட பல்வேறு உணவுப் பொருட்கள் உணவு திருவிழாவில் காட்சிப்படுத்தப்பட்டது.
இதில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
—-ரெ..வீரம்மாதேவி
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்