சர்ச்சையில் சிக்கிய அவதார் 2; அதிர்ச்சியில் ரசிகர்கள், வெளியாகுமா அவதார் படம் ?

சர்ச்சையில் சிக்கியுள்ள அவதார் 2 திரைப்படம் தடைகளையும் தகர்த்தெறிந்து  வசூல் சாதனை படைக்குமா என்பது பலரின் எதிர்பார்ப்பாக உள்ள நிலையில். அவதார் 2 பயணித்து வரும் பாதையைப் பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம்.  பன்னெடுங்காலமாகவே…

சர்ச்சையில் சிக்கியுள்ள அவதார் 2 திரைப்படம் தடைகளையும் தகர்த்தெறிந்து  வசூல் சாதனை படைக்குமா என்பது பலரின் எதிர்பார்ப்பாக உள்ள நிலையில். அவதார் 2 பயணித்து வரும் பாதையைப் பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம். 

பன்னெடுங்காலமாகவே சினிமாவும் சர்ச்சைகளும் ஒன்றோடு ஒன்று கை கோர்த்து தான் பயணிக்கிறது. தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளில் வெளியான பெரிய பட்ஜெட் படங்கள் எதுவுமே சர்ச்சையை சந்திக்காமல் வெளிவரவில்லை. அந்த வரிசையில் உலக புகழ் பெற்ற ஹாலிவுட் படமான அவதார் – 2’ம் இணைந்துள்ளது. பல எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகும் இப்படம் தொடர் சர்ச்சைகளிலும் சிக்கிவருவது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆயிரத்து 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி 2009’ல் வெளியன இப்படம் உலகம்மெங்கும் வசூல் வேட்டையாடியது. வசூலில் இன்றளவும் உலகின் நம்பர் ஒன் இடத்தை தக்கவைத்திருக்கும் இப்படம் motion capturing தொழில்நுட்பத்தில் புதிய உச்சத்தை தொட்டது. 3டி தொழில்நுட்பத்திலும் இப்படம் வரலாற்றில் புதிய புரட்சியை உருவாக்கி பலரையும் வியப்பில் ஆழ்த்தியதோடு அடுத்த பாகத்திற்கான எதிர்ப்பார்ப்பையும் பல மடங்கு உயர்த்தியது.

முதல் பாகத்தின்போது இப்படதின் அடுத்த பாகத்திற்கான கதையை இயக்குநர் ஜேம்ஸ் கேமெரூன் தயார் செய்துவிட்டிருந்த போதிலும் 13 ஆண்டுகள் கழித்து இந்த மாதம் (டிசம்பர்) 16ம் தேதிதான் வெளியாகிறது.

இந்த கால தாமதத்திற்கு பல காரணங்கள் கூறப்பட்டன. குறிப்பாக இரண்டாம் பாகம் பண்டோரா உலகின் தண்ணீர் தேசத்தை மையப்படுத்தி காட்சிபடுத்தப்பட்டுள்ளதால் இதற்காவே UNDERWATER MOTION CAPTURE தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 3டி, 4K மற்றும் 48 FRAMES PER SECOND என்ற மூன்று தொழில்நுட்பங்களையும் உள்ளடக்கி சினிமா உலகில் அடுத்த புரட்சியை ஏற்படுத்த தயாராக இருக்கிறது அவதார் 2. படத்தின் ஆக்கத்தை தாண்டி கொரோனா பேரிடரினாலும் படத்திற்கான தாமதம் அதிகதிரித்தது.

படத்தின் இயக்குநர் கேமெரூன் ஒரு தலைசிறந்த perfectionism என்று தான் சொல்லவேண்டும். கடல் நீருக்குள் பயணம் செய்வதையே தன்னுடைய ஓய்வுநேர hobbyயாக மேற்கும் அவர், ஆழ்கடலில் நிகழும் காட்சிகளின் நம்பகத்தன்மைக்காகவும் perfectionகாகவுமே பல்வேறு மெனக்கெடல்களையும் சவால்களையும் மேற்கொண்டார். தண்ணீருக்குள் நடைபெறும் காட்சிகள் cg-ஐ கொண்டு உருவாக்கும் முயற்சியில் தன்னிரைவு அடையாத கேமெரூன் அதற்கான காட்சிகள் அனைத்தையும் நீருக்குள்ளேயே படம் பிடிக்கும் முடிவுக்கு வந்தார்.

குறைந்தது ஒரு நிமிடமாவது நீருக்குள் மூச்சிப்பிடித்தால் மட்டுமே இது சாத்தியப்படும் நிலையில் இதற்காகவே அதன் நடிகர்களுக்கு ஆண்டுக்கணக்கில் பயிற்சிகளும் வழங்கப்பட்டது. படத்தின் முக்கிய வேடத்தில் நடிக்கும் டைட்டானிக் ரோஸ் கதாப்பாத்திரத்தில் நம் மனம் கவர்ந்த கேட்டி வில்சன் தொடர்ந்து 4:30 நிமிடங்களுக்கு மேல் மூச்சுப்பிடிக்கும் அளவிற்கு தேர்ந்தார். இதுபோன்ற சாகசங்களாலும், மெனக்கெடல்களாலுமே படத்தின் பட்ஜெட் பலமடங்கு எகிறியது.

சினிமா வரலாற்றிலேயே இதுவரை அதிக வசூல் செய்த படங்களின் முதல் மூன்று இடங்களுக்குள் வந்தால் மட்டுமே அவதார் -2 அணைத்து தரப்பினருக்கும் லாபகரமான படமாக இருக்கும் . இதனாலேயே உலகளவில் இப்படத்தின் டிக்கெட் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. தமிழில் டப் செய்து வெளியிடப்படும் இப்பட்டதிற்கான டிக்கெட் விலை தமிழ்நாட்டுலும் பலமடங்கு அதிகரித்துள்ளது.

படத்தின் வசூலில் 60% வழங்க வேண்டும் என்று விநியோகஸ்தார்கள் நிபந்தனை விதித்ததாக கூறப்படும் நிலையில் அதனை திரையரங்கு உரிமையாளர்கள் ஏற்க மறுப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் தமிழ்நாட்டில் படம் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதே காரணம் கொண்டு கேரளாவிலும் இப்படத்தை வெளியிடுவதற்க்கு திரையரங்க உரிமையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த சிக்கல்களும் குழப்பங்களும் நீடித்து வரும் நிலையில் பேச்சுவார்த்தை மூலம் சுமுக முடிவு எடுக்கபடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திரைப்படம் வெளியாவதற்கு முன்பாகவே தென் இந்தியாவில் மட்டும் இதுவரை சுமார் 150 கோடி ருபாய் வர்த்தகம் செய்துள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது. இப்படம் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்து தயாரவுள்ள 3 மற்றும் 4ம் பாகத்திற்கான பணிகலை தொடங்க முடியும் என தெரிவித்துள்ளார் ஜேம்ஸ் கேமெரூன். அப்படி நடக்காத பட்சத்தில் அடுத்த இரண்டு பாகத்தையும் ஒன்றாக கடைசியாக 3ம் பாகத்தின் மூலமாக அவதார் தொடரை முடித்துக்கொள்ளப்போவதாகவும் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார் கேமெரூன். இந்நிலையில் பல தடைகளையும் தகர்த்தெறிந்து அவதார் -2 படம் வசூல் சாதனை படைக்க வேண்டும் என்பதே அதன் தீவிர ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 

-ஐஸ்வர்யா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.