கர்நாடக தேர்தல் பரப்புரைக்காக கமலுக்கு அழைப்பு விடுத்த காங்கிரஸ்!

கர்நாடக தேர்தலில் பரப்புரைக்காக ராகுல்காந்தி மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக மக்கள் நீதிமய்யம் செய்திகுறிப்பு வெளியிட்டுள்ளது. கோவையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் பாராளுமன்றத் தேர்தல் முன்னேற்பாட்டு பணிகள்…

கர்நாடக தேர்தலில் பரப்புரைக்காக ராகுல்காந்தி மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக மக்கள் நீதிமய்யம் செய்திகுறிப்பு வெளியிட்டுள்ளது.

கோவையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் பாராளுமன்றத் தேர்தல் முன்னேற்பாட்டு பணிகள் குறித்தான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் நிர்வாகக்குழு, செயற்குழு மற்றும் கோவை, சேலம் மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும் மாநில நிர்வாகிகள் பலர் கருந்துரையாற்ற நிறைவாக கமல்ஹாசன் பேசினார்.

இந்த கூட்டம் தொடர்பாக மக்கள் நீதிமய்யம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கூட்டத்தில் கமல்ஹாசன், இன்று காலை ராகுல் காந்தி தன்னிடம் அலைபேசியில் பேசியதாகவும், அத்துடன் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக தனக்கு பிரச்சாரம் செய்ய அழைப்புக் கடிதம் அனுப்பியதாகவும் குறிப்பிட்டார். அதுபற்றிய முடிவை தான் விரைவில் அறிவிப்பதாகவும் கூறினார்.பாராளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை விரைவுபடுத்த வலியுறுத்திய தலைவர்
கமல்ஹாசன், உறுப்பினர் சேர்க்கை, நிர்வாகிகள் நியமனம் மற்றும் பூத் கமிட்டி
அமைப்பதில் தீவிரம் காட்டும்படியும் அறிவுரை கூறினார்.

கட்சியில் சிறப்பாக களப்பணிகள் செய்வோர் அனைவரும் உரிய முறையில் அங்கீகரிக்கப் படுவார்கள் என்பதை சுட்டிக்காட்டிய கமல்ஹாசன், தேர்தலுக்கு குறுகிய காலமே இருப்பதால் நேர்முகச் சிந்தனைகளோடு செயல்பட வேண்டிய நேரம் இது. உலகத்தில் சிறந்த சொல் “செயல்” என்பதை நாம் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும் எனவும், அரசியல் சாசனத்திற்கு ஆபத்து வருகையில் அதனைக் காப்பாற்ற கட்சி பேதங்களைக் கடந்து அனைத்து முயற்சிகளையும் நாம் முன்னெடுக்க வேண்டும் எனவும் பேசியதாக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.