சென்னையில் பாலியல் தொழிலில் ஏற்பட்ட மோதலால் விடுதிக்கு பெட்ரோல் குண்டு வீசிய நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை விருகம்பாக்கத்தில் தமீம் அன்சாரி என்பவருக்குச் சொந்தமான தங்கும்
விடுதியில் கடந்த 26ஆம் தேதி மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி தப்பிச்
சென்றனர். அந்த பெட்ரோல் குண்டு வெடித்து சிதறியதில் அங்கிருந்த கண்ணாடிகள்
நொறுங்கின. மேலும், மரப்பொருட்கள் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த விருகம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். மேலும், விடுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான
காட்சிகளைப் பார்த்தபோது தமீம் அன்சாரிக்கு தெரிந்த நபரான மதுரவாயலைச் சேர்ந்த
வினோத் என்பவர் என போலீசாருக்கு தெரியவந்தது.
இதையடுத்து, கே.கே.நகரில் பதுங்கியிருந்த வினோத்தை போலீசார் கைது செய்து விசாரணை செய்தனர். கைது செய்யப்பட்டுள்ள வினோத் மீது மதுரவாயல் மற்றும் கூடுவாஞ்சேரி காவல் நிலையங்களில் 3 கொலை வழக்குகள் உள்ளன. மதுரவாயல் கொலை வழக்கில் தொடர்புடைய தனது கூட்டாளியான கலை என்பவனோடு சேர்ந்து பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுப்பட்டுள்து தெரியவந்துள்ளது. பாலியல் புரோக்கர் தொழில் செய்துவரும் வினோத் கடந்த நான்கு வருடமாக விடுதிக்கு பெண்களை பாலியியல் தொழிலுக்கு அனுப்பிவைத்துள்ளார். தற்போது விடுதியில் இருந்து தனியாக வந்து தொழில் தொடங்கியதால், தமீம் அன்சாரிக்கும் தமக்கும் பிரச்னை ஏற்பட்டது. அதனால், ஆத்திரத்தில் பெட்ரோல் குண்டு வீசியதாக வினோத் தெரிவித்துள்ளார்.
-ம.பவித்ரா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.