முக்கியச் செய்திகள் தமிழகம்

அரசு விடுதியில் கழிவறைகளை சுத்தம் செய்யச் சொல்லி மாணவிகளை துன்புறுத்துவதாக புகார்

தேனியில் உள்ள அரசு பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதியில் மாணவிகளை கழிவறைகளை சுத்தம் செய்யச் சொல்லி கட்டாயப்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அரசு பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதி
அமைந்துள்ளது. இங்கு சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி அருகில் உள்ள
அரசு பள்ளிகளில் படித்து வருகின்றனர். இந்த விடுதியில் தங்கி படித்து வந்த மாணவி ஒருவரின் தந்தை, தனது மகளுடன் சென்று தேனி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அந்த புகாரில், ஆண்டிபட்டியில் உள்ள அரசு பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதியில் தங்கியிருக்கும் மாணவிகளை, பெரிய சமையல் பாத்திரங்களை நாள்தோறும் கழுவுவது, அறைகளையும் கழிப்பறைகளையும் சுத்தம் செய்வது உள்ளிட்ட அனைத்து பணிகளையும் செய்யச் சொல்லி துன்புறுத்துவதாகவும், இதற்கு மறுப்பு தெரிவித்தால் நாள்தோறும் ஐந்து ரூபாய் முதல் 50 ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்து தனது மகளை துன்புறுத்தி வேலை வாங்கியதால், உடல்நிலை பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும், இதுகுறித்து காவல்துறையில் புகார் கூறினால் தன்மீது வழக்கு பதிவு செய்துவிடுவதாக மிரட்டுவதாகவும், தனக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால் ஆண்டிபட்டி காவல்துறையும், விடுதி வார்டன் மற்றும் உதவியாளர் ஆகியோர்தான் பொறுப்பு என்றும் தெரிவித்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram