கான்வெல்த் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து தங்கம் வென்று சாதனை படைத்தார்.
மகளிர் ஒற்றையர் பிரிவில் நடந்த இறுதி ஆட்டத்தில் கனடா வீராங்கனை மிச்செல் லியை எதிர்கொண்டார் சிந்து. பரபரப்பாக நடந்த ஆட்டத்தில் 21-15, 21-13 என்ற நேர் செட் கணக்கில் கனடா வீராங்கனை மிச்செல் லியை வீழ்த்தி சாம்பியன் ஆனார் சிந்து.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இங்கிலாந்தின் பர்மிங்காமில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் கடந்த 28ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 72 நாடுகளை சேர்ந்த விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். காமன்வெல்த் போட்டிகள் இன்று வரை நடைபெறுகிறது.
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து சிங்கப்பூரின் யோ ஜியா மின் ஆகியோர் மோதினர். இந்த ஆட்டத்தில் 21-19, 21-17 என்ற செட் கணக்கில் சிங்கப்பூரின் யோ ஜியா மின்னை வீழ்த்தி இந்திய வீராங்கனை பி.வி.சிந்து இறுதி போட்டிக்கு முன்னேறி இருந்தார்.
இந்த காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றதன் மூலம் இரண்டாவது முறையாக காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் சிந்து தங்கப் பதக்கம் வென்றுள்ளது குறிப்பிபடத்தக்கது.
இதற்கு முன்பு கோல்டு கோஸ்ட் காமன்வெல்த் போட்டியில் கலப்பு பிரிவில் சிந்து தங்கம் வென்றிருந்தார். தனிநபர் பிரிவில் காமன்வெல்த் போட்டியில் இதுவே அவர் வெல்லும் முதல் தங்கப் பதக்கம் ஆகும்.
2018 காமன்வெல்த்தில் தனிநபர் பிரிவில் வெள்ளியும், 2014 கிளாஸ்கோ காமன்வெல்த்தில் வெண்கலமும் வென்றார்.
தங்கம் வென்ற பி.வி.சிந்துவுக்கு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.