காமன்வெல்த் பேட்மிண்டன்; பி.வி.சிந்து இறுதி சுற்றுக்கு முன்னேற்றம்

கான்வெல்த் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து இறுதி சுற்றுக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்துள்ளார். இங்கிலாந்தின் பர்மிங்காமில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் கடந்த 28ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 72 நாடுகளை சேர்ந்த…

கான்வெல்த் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து இறுதி சுற்றுக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.

இங்கிலாந்தின் பர்மிங்காமில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் கடந்த 28ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 72 நாடுகளை சேர்ந்த விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். காமன்வெல்த் போட்டிகள் வரும் ஆகஸ்ட் 8ம் தேதி வரை நடைபெறும்.

காமன்வெல்த் போட்டிகளில் இதுவரை இந்தியா 15 தங்கம், 11 வெள்ளி, 17 வெண்கல பதக்கங்கள் என 43 பதக்கங்களை வென்று 5வது இடத்தை பெற்றுள்ளது. 58 தங்கம், 46 வெள்ளி, 50 வெண்கலம் என மாத்தம் 154 பதக்கங்களை வென்று ஆஸ்திரேலியா தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து சிங்கப்பூரின் யோ ஜியா மின் ஆகியோர் மோதினர். இந்த ஆட்டத்தில் 21-19, 21-17 என்ற செட் கணக்கில் சிங்கப்பூரின் யோ ஜியா மின்னை வீழ்த்தி இந்திய வீராங்கனை பி.வி.சிந்து இறுதி போட்டிக்கு முன்னேறினார். இதன்மூலம் பி.வி.சிந்து வெள்ளி அல்லது தங்கப் பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.