காமராஜர் பெயரில் கல்லூரி மேம்பாட்டுத் திட்டம்; நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

காமராஜர் பெயரில் கல்லூரி மேம்பாட்டுத் திட்டம் ரூ.1,000 கோடி செலவில் செயல்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் தமிழ்நாடு பட்ஜெட் மீதான விவாதம் இன்று 4ம் நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.…

காமராஜர் பெயரில் கல்லூரி மேம்பாட்டுத் திட்டம் ரூ.1,000 கோடி செலவில் செயல்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் தமிழ்நாடு பட்ஜெட் மீதான விவாதம் இன்று 4ம் நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்றைய சட்டப்பேரவை விவாதத்தில் பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், பட்ஜெட்டில் அடுக்குமாடி குடியிருப்புகள், உதவித்தொகைக்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை தமிழ்வழிக் கல்வியில் படித்து பாலிடெக்னிக், ஐடிஐ மாணவிகளுக்கும் மாதம் ரூ.1,000 கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்றும் அவர் அறிவிப்பு வெளியிட்டார்.

கல்லூரிக் கட்டடங்கள் கட்டுவதற்கு பட்ஜெட்டில் ரூ.1000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், இத்திட்டத்துக்கு, காமராஜர் கல்லூரி மேம்பாட்டு திட்டம் என பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். அதேபோல், சென்னை நந்தனத்தில் உள்ள எம்.சி ராஜா கல்லூரி விடுதியில் நவீன விடுதி கட்டிடம் 75 ஆயிரம் சதுர அடி பரப்பளவில், ஆறு தளங்கள் கொண்டு ரூ.40 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் என்றும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு வெளியிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.