கேரள மாநிலம் திருச்சூரில், ஸ்கூட்டருடன் வைத்திருந்த ஹெல்மெட்டிற்குள் புகுந்த 2 மாதமான நாகப்பாம்பு குட்டியை லாவகமாக மீட்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டது.
கேரளா மாநிலம் திருச்சூரிலுள்ள புத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஷோஜன். இவர் வேலை பார்க்கும் இடத்திற்கு ஸ்கூட்டரில் சென்றுள்ளார். அங்கு வாகனம்
நிறுத்தும் இடத்தில் ஸ்கூட்டரை நிறுத்தியதுடன் ஸ்கூட்டரின் கண்ணாடியில்
ஹெல்மெட்டை மாட்டி வைத்துள்ளார். பின்னர் வேலை முடிந்ததும் வீட்டிற்கு செல்வதற்காக வந்த போது ஹெல்மெட்டிற்குள் பாம்பு செல்வதை கண்டு அதிர்ந்த ஷோஜன் உடனடியாக பாம்பு பிடிக்கும் லிஜோ என்பவரை அழைத்துள்ளார்.
இதனையடுத்து, அவர் வந்து பார்த்த போது ஹெல்மேட்டினுல் மறைந்திருந்த 2 மாதமான நாகப்பாம்புக்குட்டி இருந்ததை கண்டுபிடித்து பாம்பை வனப்பகுதியில் விட்டார். மேலும் ஷோஜன் பாம்பு ஹெல்மெட்டிற்குள் செல்வதை பார்த்ததால் உயிர் தப்பினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ரூபி.காமராஜ்