போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்த முதல்வர்!

மதுரை விமான நிலையம் அருகே, போலியோ சொட்டு மருந்து வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குழந்தையுடன் பேசி உரையாடினார். மதுரை யானைமலை ஒத்தக்கடை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, மதுரை விமான நிலையம் வந்த முதலமைச்சர்…

மதுரை விமான நிலையம் அருகே, போலியோ சொட்டு மருந்து வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குழந்தையுடன் பேசி உரையாடினார்.

மதுரை யானைமலை ஒத்தக்கடை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, மதுரை விமான நிலையம் வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அங்கே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போலியோ சொட்டு மருந்து முகாமில் கலந்து கொண்டார். தொடர்ந்து குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தை வழங்கினார். அப்போது ஒரு குழந்தை நன்றி தெரிவித்து, கைகுலுக்க வந்தபோது இருகரம் கூப்பி வணக்கம் தெரிவித்து, அக்குழந்தையுடன் முதலமைச்சர் உரையாடினார்.

இந்த போலியோ சொட்டு மருந்து முகாமில், அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply