12 அமைச்சர்களிடம் தனித்தனியாக பேசிய முதலமைச்சர்; அமைச்சரவைக் கூட்டத்தில் நடந்தது என்ன?

12 அமைச்சர்களை தனித்தனியாக அழைத்து செயல்பாடுகள் குறித்த விமர்சனங்களை வைத்து, முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையின் 9ஆவது கூட்டம் தலைமைச் செயலகத்தில் நேற்று மாலை நடைபெற்றது. அக்டோபர்…

12 அமைச்சர்களை தனித்தனியாக அழைத்து செயல்பாடுகள் குறித்த விமர்சனங்களை வைத்து, முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையின் 9ஆவது கூட்டம் தலைமைச் செயலகத்தில் நேற்று மாலை நடைபெற்றது. அக்டோபர் 17ஆம் தேதி சட்டமன்றம் கூடவுள்ள நிலையில், துறைவாரியாக அமைச்சர்கள் தயாராவதற்கான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார் ஸ்டாலின்.

ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை சட்டமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள நிலையில் அதுகுறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

இதனிடையே அமைச்சர்கள் பொது இடங்களில் பேசி விமர்சனத்திற்குள்ளான கருத்துகள் தொடர்பாக தனது வருத்தங்களை வெளிப்படையாக தெரிவித்திருந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். நேற்று நடந்த கூட்டத்தில் அமைச்சரவையில் மாற்றம் செய்யும் சூழல் வரும் அளவிற்கு நடந்துகொள்ளாதீர்கள் என அமைச்சர்களிடம் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

அமைச்சரவை கூட்டத்திற்குப் பிறகாக தனது அமைச்சரவையின் 33 அமைச்சர்களில் 12 அமைச்சர்களை தனித்தனியாக சந்தித்த ஸ்டாலின், 2 முதல் 3 நிமிடங்கள் அவர்களிடம் பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் மீது வரும் விமர்சனங்களை தெரிவித்துள்ள ஸ்டாலின், வருங்காலங்களில் அவற்றை தவிர்த்து மேலும் சிறப்பாக செயல்பட அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.