காரைக்காலில் காலரா பரவல் எதிரொலியாக மாவட்டத்தை சுத்தம் செய்யும் பணிகள்
தீவிரமாக நடைபெற்று வருகிறது.
காரைக்கால் மாவட்டத்தில் பலருக்கு காலரா நோய் அறிகுறி ஏற்பட்டுள்ள நிலையில்,
பொது சுகாதார அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. மேலும், மாவட்டத்தை
சுத்தம் செய்யும் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பேருந்து
நிலையம், ரயில் நிலையம், பூங்காக்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களை
சுத்தம் செய்து பீளீச்சிங் பவுடர் மற்றும் கிருமி நாசினி தெளிக்கும் பணியில்
நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் ஈடுப்பட்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்த்தேக்கத் தொட்டிகளையும் சுத்தம் செய்ய குழுக்கள்
அமைக்கப்பட்டு சுத்தம் செய்யும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. மக்களின் உடல்
நிலையை கண்காணிக்க 15 மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு வீடு வீடாகச் சென்று
ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் இன்று முதல் 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு முழுவதுமாக சுத்தம் செய்ய உத்தரவு
பிறப்பிக்கப்பட்டுள்ளது,
மேலும், காரைக்காலில் உள்ள அனைவரும் சுடவைத்த குடிநீர் அல்லது RO முறையில்
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மட்டுமே பருக வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தின்
உத்தரவைத் தொடர்ந்து அனைத்து அரசு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்களிலும்
பொதுமக்கள் வரிசையில் நின்று குடிநீர் எடுத்துச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
-ம.பவித்ரா