சித்திரை மாத பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது.
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் 108 திவ்யதேசங்களில் ஒன்றாகும். மே 4 ஆம் தேதி இந்த சித்திரை மாத பிரம்மோற்சவம் கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஒவ்வொரு நாளும் ஷேச வாகனம், சிம்ம வாகனம், கருட வாகனம் என சாமி வீதி உலா நடைபெற்றது. ஏழாம் நாள் திருவிழாவான இன்று கோவிந்தா என்ற முழக்கத்துடன் திருத்தேரோட்டம் நடைபெற்று வருகிறது. பக்தர்கள் தேர் சங்கிலியை பிடித்து தேரை கோவிலின் நான்கு மாட வீதிகளிலும் இழுத்து செல்கின்றனர்.
செல்லும் வழியெல்லாம் தேரின் சக்கரத்துக்கு அடியில் உப்பு வைத்து வழிபடுகின்றனர். இப்படி செய்வதால் நமது கஷ்டங்களும் நசுங்கிவிடும் என்ற நம்பிக்கை இருப்பதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர். நூற்றுக்கணக்கான பக்தர்கள் தேருக்கு முன்பு நெற்றியில் நாமம் இட்டுக் கொண்டு திவ்ய பிரபந்தம் பாடி செல்கின்றனர்.