தமிழ்நாட்டில் நேற்று முதல் நாளிலேயே 10 சதவீத சிறார்களுக்கு கொரோனோ தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
சென்னை சைதாபேட்டை பெண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறார்களுக்கான தடுப்பூசி செலுத்தும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். இதன் பின்னர் பேசிய முதலமைச்சர், ஒமிக்ரான் பரவலை தடுக்க அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும் எனவும், இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் விரைவாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும் மன்றாடிக் கேட்டுக்கொண்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக தெரிவித்தார். 15 நாட்களில் 100 சதவீத சிறார்களுக்கும் தடுப்பூசி போடும் பணி நிறைவடையும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
முதல்நாளான நேற்று, தமிழ்நாடு முழுவதும் 3 லட்சத்து 32 ஆயிரத்து 493 சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. அதிகப்பட்சமாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் 22 ஆயிரத்து 310 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.