28.6 C
Chennai
April 25, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம்

சிறார் கொரோனோ தடுப்பூசி: முதல் நாளிலேயே 10% செலுத்திய தமிழ்நாடு

தமிழ்நாட்டில் நேற்று முதல் நாளிலேயே 10 சதவீத சிறார்களுக்கு கொரோனோ தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

சென்னை சைதாபேட்டை பெண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறார்களுக்கான தடுப்பூசி செலுத்தும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். இதன் பின்னர் பேசிய முதலமைச்சர், ஒமிக்ரான் பரவலை தடுக்க அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும் எனவும், இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் விரைவாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும் மன்றாடிக் கேட்டுக்கொண்டார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக தெரிவித்தார். 15 நாட்களில் 100 சதவீத சிறார்களுக்கும் தடுப்பூசி போடும் பணி நிறைவடையும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

முதல்நாளான நேற்று, தமிழ்நாடு முழுவதும் 3 லட்சத்து 32 ஆயிரத்து 493 சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. அதிகப்பட்சமாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் 22 ஆயிரத்து 310 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading