சென்னை புத்தகக் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை புத்தகக் கண்காட்சியை வரும் 16-ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளதாக தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது. ஆண்டுதோறும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் சங்கம் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம்…

சென்னை புத்தகக் கண்காட்சியை வரும் 16-ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளதாக தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

ஆண்டுதோறும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் சங்கம் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் சென்னையில் புத்தக கண்காட்சி நடத்தப்படும். அதன்படி, நடப்பாண்டில் ஜனவரி 6-ஆம் தேதி தொடங்கி 23-ஆம் தேதி வரை புத்தக கண்காட்சி நடத்த திட்டமிடப்பட்டு, அதற்கான ஏற்படுகள் செய்யப்பட்டு இருந்தது. ஆனால், கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், புத்தகக்காட்சி ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருவதால், தமிழ்நாட்டில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதில், கண்காட்சி போன்ற நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி இல்லை என தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அண்மைச் செய்தி: அப்பாவிகள் மீதான காவல்துறையின் வன்முறை வெறியாட்டத்தை ஒருபோதும் ஊக்கப்படுத்த முடியாது: சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

இதனைத் தொடர்ந்து, தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் சங்கம் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில், புத்தக கண்காட்சியை நடத்த தமிழ்நாடு அரசு தற்போது அனுமதி வழங்கியுள்ளது. பிப்ரவரி 16-ஆம் தேதி முதல் மார்ச் 6-ஆம் தேதி வரை புத்தகக்காட்சியை நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில், நந்தனம் YMCA மைதானத்தில், தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்க செயலாளர் முருகன் செய்தியாளார்களை சந்தித்தார். அப்போது, 800 அரங்குகளில் 500 பதிப்பகங்கள் மூலம் 1 லட்சம் தலைப்பிலான புத்தகங்கள் விற்பனை செய்யப்படவுள்ளதாக தெரிவித்தார். மேலும், புத்தகக் கண்காட்சியை வரும் 16-ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என்று தெரிவித்த அவர், தொடக்க விழாவில் 2022-ஆம் ஆண்டுக்கான முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி பொற்கிழி விருதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குவார் என்றும் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.