பாகிஸ்தான் நாட்டு செஸ் விளையாட்டு வீரர்கள் 19 போ், ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்ளாமல், சென்னையிலிருந்து புனே புறப்பட்டு சென்றனர்.
44 ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்வதற்காக, பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த செஸ் விளையாட்டு வீரர்கள் 19 பேர், நேற்று காலை புனைவிலிருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்தனர். அவர்களைச் சென்னை விமான நிலையத்தில், தமிழ்நாடு அரசு அதிகாரிகளும், ஒலிம்பியாட் வரவேற்பு குழுவினரும் வரவேற்றனர். அதன் பின்பு அவர்களைச் சொகுசு வாகனங்களில், அவர்கள் தங்கும் இடமான, சென்னை ஓஎம்ஆர் சாலை, சிறுசேரியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதிக்கு அனுப்பி வைத்தனர்.
அண்மைச் செய்தி: ‘44வது செஸ் ஒலிம்பியாட்; முதல் சுற்று அட்டவணை வெளியீடு!’
இந்நிலையில், அவர்கள் 19 பேரும் நேற்று இரவு திடீரென சிறுசேரி நட்சத்திர விடுதியிலிருந்து சொகுசு வாகனங்களில் புறப்பட்டு, சென்னை உள்நாட்டு விமான நிலையம் சென்று, அங்கிருந்து இரவு 11 மணிக்கு புனே செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், புனைவுக்குத் திரும்பிச் சென்றனர். அவர்களை அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர்.
இது சம்பந்தமாக விசாரித்த போது, பாகிஸ்தான் நாட்டு அரசு, அவர்களை செஸ் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ள வேண்டாம் என்று கூறிவிட்டதால் அவர்கள் செஸ் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ளாமல் திரும்பிச் சென்று விட்டதாகச் சொல்லப்படுகிறது.








