செஸ் ஒலிம்பியாட் போட்டியால் தமிழகத்துக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கே பெருமை ஏற்பட்டுள்ளது என்று விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
மாமல்லபுரம் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் முன்னோட்டத் தொடர் தொடங்கியது. ரேபிட் முறையில் நடைபெறும் இந்தப் போட்டி நடைபெறுகிறது. இதனை அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து, செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஒத்திகை போட்டி துவங்கி வைக்கப்பட்டுள்ளது. இதில், 707 போர்டுகள் கொண்டு, 1,414 வீரர் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தப் போட்டி ஒரு நோபல் உலக சாதனையாக பார்க்கப்படுகிறது. ஒலிம்பியாட் போட்டிக்கான ஏற்பாடுகள் 4 ஆண்டுகள் செய்ய வேண்டியதை, விரைவில் செய்து முடித்து தற்போது ஒத்திகை போட்டியை நடத்தி காட்டி இருக்கிறார் முதல்வர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தமிழ்நாடு மட்டும் அல்ல இந்தியா முழுவதுமாக குக்கிராமம் வரை செஸ் போட்டிகளுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் வரும் 25 ஆம் தேதி முதல் ஒலிம்பியாட் ஜோதி கால் தடம் பதிக்கிறது. எதிர்காலத்தில் எல்லோரும் அவரவர் வீட்டில் ஒரு செஸ் போர்டு வைத்து குடும்பத்துடன் தினமும் ஒருமணி நேரம் விளையாட வேண்டும். 366க்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்கள் இந்தப் போட்டியில் சுகாதார பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. விளையாட்டுப் போட்டிகளில் பங்குபெறும் போட்டியாளர்களுக்கு 44 வகையான உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
-ம.பவித்ரா