ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை, செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் நடைபெறும் என விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனை, அகில இந்திய சதுரங்க கூட்டமைப்பு தலைவர் சஞ்சய் கபூர், சதுரங்க போட்டிகளுக்கான இயக்குனர் பரத் சிங் செளகான் உள்ளிட்டோர் சந்தித்து, செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மெய்யநாதன், 4 ஆண்டுகள் திட்டமிட்டு நடத்த வேண்டிய போட்டியை , நான்கே மாதங்களில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை அரசு துரிதமாக மேற்கொண்டு வருவதாக கூறினார். ஜூலை 27ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை மாமல்லபுரத்தில் நடைபெறும் இப்போட்டிக்காக, செஸ் ஒலிம்பியாட் சிறப்புக்குழுக்கள் அமைக்கப்படும் எனவும் அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.