செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் கிரிக்கெட் வீரர் தோனி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, கடந்த மாதம் 28-ம் தேதி தொடங்கியது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் 28-ம் தேதி நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு போட்டியை தொடங்கிவைத்தார்.
11 நாட்கள் நடைபெற்ற இந்த விழாவில் தமிழர்களின் வரலாற்றை எடுத்து காட்டி நடத்தப்பட்ட நிகழ்ச்சிகள் வெளிநாட்டு வீரர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில், ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழா இன்று நடைபெறுகிறது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை நடைபெறுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் நிறைவு விழாவில், வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், நிறைவு விழாவின் சிறப்பு விருந்தினர்களாக விஸ்வநாதன் ஆனந்த், அனைத்திந்திய சதுரங்க கூட்டமைப்பின் தலைவர் சஞ்சய் கபூர், சர்வதேச சதுரங்க போட்டி இயக்குனர் பாரத் சிங் கலந்து கொள்கின்றனர். மேலும் கிரிக்கெட் வீரர் தோனியும் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார் என அழைப்பிதழில் இடம் பெயர் இடம்பெற்றிருந்தது. தோனி சிறப்பு விருந்தினராக பங்கேற்க இருந்ததால், தோனியின் ரசிகர்கள் மட்டும் இன்றி செஸ் வீரர்களும் உற்சாகமடைந்தனர். இந்த நிலையில் அவர் விழாவில் பங்கேற்க மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
– இரா.நம்பிராஜன்








