சென்னையில் டிராவல்ஸ் ஏஜென்ஸியின் பெயரில் போலி வலைத்தளம் தொடங்கி டூர் பேக்கேஜிற்காக பதிவு செய்தவர்களை ஏமாற்றி பணம் பறித்த இருவர் குஜராத்தில் கைது.
மெட்ராஸ் டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் நிறுவனத்தின் பெயரில் போலி வலைத்தளம் தொடங்கி வாடிக்கையாளர்களிடம் பண மோசடி நடைபெறுவதாக, அந்நிறுவனம் சார்பில், சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 3 பேர் இந்த மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதைனையடுத்து, குஜராத் மாநிலத்திற்குச் சென்ற தனிப்படை போலீசார், அகமதாபாத் பகுதியைச் சேர்ந்த தேவராஜ் சிங், ஷ்வரன்சிங் ஆகிய இருவரைக் கைது செய்தனர். விசாரணையில், தேவராஜ் சிங்கின் சகோதரர் திலீப்சிங், தாய்லாந்து நாட்டில் வேலை செய்து வருவதும், டிராவல் ஏஜென்சியின் பெயரில் போலி வலைத்தளம் தொடங்கி, தேவராஜ் சிங் மற்றும் ஷ்வரன்சிங் ஆகியோரின் வங்கிக் கணக்குகளில் வாடிக்கையாளர்களைப் பணத்தைச் செலுத்தச் செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து, திலீப் சிங்கை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.