29.7 C
Chennai
May 20, 2024
செய்திகள்

சென்னை அணியை 134 ரன்களுக்கு சுருட்டிய பஞ்சாப்

மும்பை அணிக்கு 135 ரன்களை இலக்காக சென்னை அணி நிர்ணயித்துள்ளது. 

சென்னை பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி துபாயில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கியது. இதில், டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் பாஃப் டு பிளிசிஸ் களமிறங்கினர். ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக ருதுராஜ் 12 ரன்னில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். இவரைத்தொடர்ந்து வந்த மொயின் அலி ரன் ஏதும் எடுக்காமலும், உத்தப்பா 2 ரன்னிலும், ராயுடு 4 ரன்னிலும் வெளியேறினர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தனி நபராக பாஃப் டு பிளிசிஸ் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தி வந்தார். சென்னை அணி கேப்டன் தோனி அணிக்கு சிறப்பான பங்களிப்பை அளிப்பார் என எதிர்பார்த்த நிலையில், அவர் 12 ரன்னில் அவுட்டானார். 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா, பிராவோ அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர். அணியில் அதிகபட்சமாக பாஃப் டு பிளிசிஸ் 55 பந்துகளுக்கு 76 ரன்கள் விளாசியிருந்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading