சென்னை பச்சையப்பன் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் ககன்தீப்சிங் பேடி ஆய்வு மேற்கொண்டார்.
பச்சையப்பன் கல்லூரியில் அமைந்துள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் முன்னேற்பாடுகளை அவர் ஆய்வு செய்தார். அப்போது, இரும்பு தடுப்புகள் கொண்டு தடுப்பு அமைக்கும் பணி, மின்னணு இயந்திரம் பாதுகாப்பு அறை உள்ளிட்டவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதில், சென்னையில் மட்டும் 15 இடங்களில் வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது, பேசிய மாவட்ட தேர்தல் அலுவலர் ககன் தீப் சிங் பேடி, சென்னை மாநகராட்சி தேர்தலில் ஒவ்வொரு வாக்கு சாவடிக்கு அனுப்பும் மின்னணு வாக்கு இயந்திரம், கணினி குழுக்கள் முறையில் தேர்வு செய்யும் பணி நடைபெற்றதகவும், தேர்தல் பணியில் ஈடுபடும் 21,000 அலுவலர்களுக்கு 10-ஆம் தேதி இரண்டாம் கட்ட பயிற்சி நடைபெற இருப்பதாக தெரிவித்தார்.
மணலி குடோனில் இருந்து 22 மையங்களுக்கு மின்னணு இயந்திரங்கள் கொண்டு செல்லப்படுவதாகவும், பிப்ரவரி 12-ஆம் தேதி மின்னணு இயந்திரத்தில் வேட்பாளர் பெயர் மற்றும் சின்னம் பொறுத்தும் பணி நடைபெறும் எனவும் தெரிவித்தார். மேலும், 15 மையங்களில் 37 அரங்குகளில் வாக்கு எண்ணிக்கைக்கு தயார் செய்யும் பணி பிப்ரவரி 16 நிறைவு பெறும் எனவும் அவர் தெரிவித்தார்.
அதேபோல, வீடு வீடாக பிரச்சாரம் செய்ய அனுமதி பெற தேவை இல்லை எனவும், பிரச்சார கூட்ட உள்ளரங்கில் 500 பேர் அல்லது 50% இருக்கையுடன் இருக்கலாம் எனவும், பொது வெளியில் 1000 பேர் வரை அனுமதி பெற்று நடத்தலாம் எபவும் அவர் தெரிவித்தார். சென்னையில், 168 இடங்களில் வார்ட் வாரியாக பொது வெளியில் பிரச்சாரம் செய்ய அனுமதி வழங்கப்படுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், காவல் துறை அனுமதியுடன், பிரச்சாரத்தை நடத்திக்கொள்ள அரசியல் கட்சியினர் மற்றும் சுயட்சை வேட்பாளர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஆதாரம் இல்லாமல் பண பரிவர்த்தனை செய்ய கூடாது என தெரிவித்த அவர், சிசிடிவி பொருத்தும் பணி தேர்தல் வாக்குபதிவுக்கு இரண்டு நாள் முன்பு நடைபெறும் என குறிப்பிட்டார். மேலும், விதிமுறை மீறி பிரச்சார கூட்டங்கள் நடத்தினால் வழக்கு போட அறிவுறுத்தப்பட்டு இருப்பதாகவும், இதுவரை 5 இடங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக ககன் தீப் சிங் பேடி பேட்டியில் தெரிவித்தார்.