சென்னையில் மின்சார ரயில் விபத்துக்குள்ளானது குறித்து ரயில் ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு நேற்று மாலை பணிமனையில் இருந்து வந்த மின்சார ரயில், திடீரென முதல் நடைமேடையின் மீது ஏறி விபத்துக்குள்ளானது. ரயிலில் பயணிகள் இல்லாததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இதனையடுத்து விபத்துக் காலங்களில் பயன்படுத்தப்படும் சிறப்பு என்ஜின் மூலம் ரயில் பெட்டிகளை அகற்றும் பணியில் 50-க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர். 9 மணி நேர போராட்டத்திற்கு பிறகு விபத்துக்குள்ளான மின்சார ரயில் அகற்றப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சென்னை கடற்கரை ரயில் நிலையத்தின் முதல் நடைமேடையில் இருந்து இன்று காலை ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. விபத்தில் சிக்கிய ரயில் முழுமையாக மீட்கட்டப்பட்ட நிலையில், இந்த விபத்தால் எந்த ஒரு ரயில் சேவையும் ரத்து செய்யப்படவில்லை என்று தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.
மின்சார ரயில் விபத்துக்குள்ளானது குறித்து ரயில் ஓட்டுநர் மீது எழும்பூர் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சென்னை கடற்கரை ரயில் நிலைய கண்காணிப்பாளர் துர்கா அளித்த புகாரின்படி, வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் அதி வேகமாக வாகனங்களை இயக்குதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.