30.8 C
Chennai
May 15, 2024
தமிழகம் செய்திகள் வாகனம்

திண்டிவனம் புதுச்சேரி சாலையில் தனியார் பேருந்தும் காரும் மோதி விபத்து – கணவன் மனைவி படுகாயம்!

திண்டிவனம், புதுச்சேரி சாலையில் தனியார் பேருந்து, காரில் மோதி விபத்துக்குள்ளானதில், கணவன் மனைவி படுகாயம் அடைந்தனர்.

திண்டிவனம், பகுதியில் இருந்து புதுச்சேரி நோக்கி விஜயகுமார் என்ற தனியார்
பேருந்து பட்டானுர் அருகே வந்து கொண்டிருந்தது. இதேபோன்று புதுச்சேரியில்
இருந்து ஜவஹர் நகரை சார்ந்த சத்தியமூர்த்தி தனது மனைவியுடன் கூட்ரோடு
பகுதிக்கு காரில் சென்றுள்ளார்.

அப்போது பட்டானுர் பகுதியில் சாலையின் குறுக்கே சென்ற மாட்டின் மீது மோதாமல் இருக்க பேருந்து ஓட்டுநர் பேருந்தை திருப்பியபோது சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரின் மீது ஏறி எதிரே வந்த கார் மீது பலமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணித்த ஜவஹர் நகரைச் சார்ந்த சத்தியமூர்த்தி மற்றும் அவரது மனைவி ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

உடனடியாக அருகில் உள்ளவர்கள் அவர்களை மீட்டு புதுச்சேரி ஜிப்மர்
மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஆரோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

 

ரூபி.காமராஜ்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading