31.9 C
Chennai
May 30, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம்

விரைவில் கஞ்சா இல்லா தமிழ்நாடு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கஞ்சா இல்லா தமிழகம் விரைவில் உருவாக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதியளித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் நடைபெற்ற உலக புகையிலை ஒழிப்பு தின நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்றார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மேடையில் பேசிய அவர், “9.3 % பெண்களும், 31% ஆண்களும் தமிழகத்தில் புகையிலையை பயன்படுத்தி வருகின்றனர். 13,080 பள்ளிகளில் தொடர் புகையிலை ஒழிப்பு கண்காணிக்கப்படுகிறது. 1,344 கல்லூரிகள் புகையிலை இல்லா நிறுவனங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டத்திற்கு பயந்து மட்டுமல்லாமல், மனசாட்சிக்கு பயந்து போதைப் பொருட்களை விற்பனை செய்வதை விற்பனையாளர்கள் நிறுத்த வேண்டும்” என்றார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனை தொடர்பாக 3500 கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் கொடுக்கப்பட்டு 21 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, கண்காணிக்கப்பட்டு, கஞ்சா இல்லா தமிழகம் விரைவில் உருவாக்கப்படும். பான்பராக், குட்கா விற்க கர்நாடகாவில் தடை இல்லை என்பதால் பெங்களூருவில் இருந்து காய்கறி வண்டியில் குட்கா போன்ற போதைப் பொருட்கள் தமிழகத்திற்கு கடத்தப்படுகிறது” என்று குறிப்பிட்டார்.

குரங்கம்மை நோய் பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகளை கண்காணிக்கும் பணி நடைபெற்று வருகிறது என்றும் அமைச்சர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading