உத்தரகாண்ட் மாநிலத்தில் 14 பயணிகளுடன் சென்ற பேருந்து நிலச்சரிவில் இருந்து தப்பிய வீடியோ வைரலாகி வருகிறது.
இமாச்சலப் பிரதேசத்தில், கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட நிலச்சரிவில் பேருந்து, கார் ஆகியவை மண்ணோடு புதைந்தன. இதில் இருந்து 28-க்கும் அதிகமானோர் உடல்கள் மீட்கப் பட்டன. இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் 14 பேருடன் சென்ற பேருந்து நூலிழை யில், நிலச்சரிவில் இருந்து தப்பி இருக்கிறது.
உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் பகுதியில், மலைப்பகுதியில் பேருந்து ஒன்று 14 பயணி களை ஏற்றி கொண்டு நேற்று சென்றது. திடீரென, மலைப் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு மரம் செடி கொடிகளுடன் மணல் சாலையில் கொட்டியது.
இதைக் கண்ட பேருந்து ஓட்டுனர் நிலச்சரிவைக் கணித்து பேருந்தை முன்பே நிறுத்தி விட்டார். இதைக் கண்ட பயணிகளில் சிலர் ஜன்னல் வழியே குதித்தும், சிலர் வாசல் வழி யாகவும் தப்பியோடினர். இதன்பின்பு பேருந்து பின்னோக்கி இயக்கப்பட்டு பாதுகாப்பான பகுதிக்குச் சென்றது.
ஒரு சில நிமிடங்கள் முன்னே சென்றிருந்தால் பேருந்து விபத்தில் சிக்கியிருக்கும். இது பற்றிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.







