30 C
Chennai
May 20, 2024
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

பட்ஜெட்டில் செயற்கை வைரத்தை பற்றி குறிப்பிட்ட நிர்மலா சீதாராமன் – எப்படி உருவாக்கப்படுகிறது?

2023-24ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். வருமான வரி விலக்குகான வரம்பு தளர்த்தப்பட்டது, பெண்களுக்கான சேமிப்பு திட்டம், தங்கத்துக்கான இறக்குமதி உயர்வு உள்ளிட்ட ஏராளமான அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம் பெற்றிருந்தன.

நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில்,  ஆய்வகங்களில் உருவாக்கப்படும் செயற்கை வைரத்தின் மீது மத்திய அரசு தனி கவனம் செலுத்த இருப்பதாக குறிப்பிட்டார். மேலும் செயற்கை வைரத்தை தயாரிப்பதற்கு பயன்படும் மூலப்பொருளுக்கு சுங்க வரி குறைக்கப்படும் என்று குறிப்பிட்டு இருந்தார். செயற்கை வைரத்தை தயாரிப்பை ஊக்கப்படுத்தும் வகையில் இந்திய தொழில்நுட்ப கல்லூரிகளுக்கு (ஐஐடி) நிதி வழங்க இருப்பதாகவும் தனது உரையில் தெரிவித்திருந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

செயற்கை வைரம் என்றால் என்ன?

இயற்கை வைரங்களின் கையிருப்பு குறைந்து வருவதால் ஆய்வகங்களில் செயற்கை வைரங்கள் உருவாக்கப்படுகிறது. புவியியல் செயல்முறைகளை பயன்படுத்தி இந்த செயற்கை வைரங்கள் தயாரிக்கப்படுகின்றன. வைரங்கள் போன்ற தோற்றமளிக்கும் கியூபிக் ஜிர்கோனியம், மோய்சனைட் உள்ளிட்ட கற்கள் நீண்ட காலம் வைரத்தை போல தோற்றமளிக்காது. அது உண்மையான வைரம் அல்ல என்பதை எளிதாக கண்டறிய முடியும். ஆனால் ஆய்வகத்தில் உருவாக்கும் செயற்கை வைரங்களுக்கு இயற்கை வைரங்களுக்கும்  இடையே உள்ள வித்தியாசத்தை கண்டறிவது மிகவும் கடினம். பார்ப்பதற்கு இயற்கை வைரம் போன்று இருக்கும் வகையில் துல்லியமாக தயாரிக்கப்படுகிறது.

செயற்கை வைரம் எப்படி தயாரிக்கப்படுகிறது?

செயற்கை வைரம் பல முறைகளில் தயாரிக்கமுடியும். இருப்பினும் மிக செலவு குறைந்த அளவில் தயாரிக்கும் முறையாக ஹெச்பிஹெச்டி உள்ளது. அதாவது அதிக அழுத்தம் மற்றும் அதிக வெப்பத்தை பயன்படுத்தி செயற்கை வைரம் தயாரிக்கப்படுகிறது. குறைந்தபட்சம் 1550 செல்சியஸ் வெப்பநிலையிலும் 7,30,000 பிஎஸ்ஐ அழுத்தத்திலும் செயற்கை வைரம் உருவாக்கப்படுகிறது. பொதுவாக செயற்கை வைரத்தை உருவாக்க கிராபைட் மூலப்பொருளாக பயன்படுத்தப்படும். சிலவற்றில் கார்பன் கற்கள் மூலப் பொருளாக பயன்படுத்தப்படுகின்றன.

செயற்கை வைரம் எதற்கு பயன்படுகிறது?

தொழில் துறையில் செயற்கை வைரம் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. செயற்கை வைரத்தில் உறுதி தன்மையும் வலுவான அமைப்பும் இருப்பதால் கட்டிங் செய்வதற்கு உபயோகப்படுத்தப்படுகின்றன. ஜூவல்லரி துறையில் செயற்கை வைரம் தற்போது அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது பட்ஜெட்டில் செயற்கை வைரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதால் இந்தத்துறை அதிகளவில் வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading