2022-23 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்து வருகிறார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கிய நிலையில் இன்று நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. காலை 11 மணி அளவில் மக்களவையில் கூட்டம் கூடியதும் முதல் நிகழ்வாக நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பட்ஜெட் 2022-ன் சிறப்பு அம்சங்கள்:
- 2025ஆம் ஆண்டுக்குள் 100% ஆப்டிக்கல் பைபர் நெட் வசதி அமைக்கப்படும்.
- மின்சார வாகனங்களின் பயன்பாடு ஊக்குவிக்கப்படும்.
- சூரிய மின்சக்தி திட்டங்களுக்கு ரூ.19,500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
- உள்ளூர் சூரிய ஒளி மின்சார தயாரிப்பு நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும்.
- 1 முதல் 12ஆம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
- தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு நிதி உதவி திட்டம் வழங்கப்படும்.
- அறுவடைக்கு பிறகு பயிர்க்கழிவுகள் எரிப்பதை தடுக்க திட்டங்கள் உருவாக்கப்படும்.
- 2030ஆம் ஆண்டுக்குள் சூரியஒளி மூலம் 280 கிகா வாட் மின்சாரம் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- நாட்டின் மூலதனச் செலவுகள் ரூ.7.5 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
- நாட்டின் மூலதனச் செலவுகள் 35.4% அதிகரித்துள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.