தூத்துக்குடி மாவட்டத்தில் , பிரசித்தி பெற்ற நவதிருப்பதி கோயில்களில் ஒன்றான “திருப்புளியங்குடி காய்சினிவேந்தப்பெருமாள் கோயிலில்” , பங்குனி பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தூத்துக்குடி மாவட்டத்தில். ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள நவதிருப்பதி கோயில்களில்
ஒன்றாகவும், 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது , திருப்புளியங்குடி
காய்சினிவேந்தப் பெருமாள் திருக்கோயில். இந்த கோயிலில் வருடம் தோறும் பங்குனி
பிரம்மோற்சவ விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்நிலையில், இந்தாண்டுக்கான பங்குனி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
மேலும், கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து விஸ்வரூபம், திருமஞ்சனம், நித்திய கோஷ்டி நடந்தது. காலை 9
மணிக்கு சயன குரடு மண்டபத்தில், உற்சவர்” பொலிந்து நின்ற பிரான்” தாயார்களுடன்
எழுந்தருளினார். கொடிப்பட்டம் கோயில் வளாகத்தை சுற்றி வந்த பின்னர் , கொடிமரத்திற்கு தீபாராதனை செய்யப்பட்டு கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிகழ்வில் , திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த
பிரம்மோற்சவ திருவிழா நாட்களில், தினமும் இரவு பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி
புறப்பாடு நடைபெறும். இதனை தொடர்ந்து , மார்ச் 21ஆம் தேதி திருக்கல்யாண உற்சவம்
நடைபெறுகிறது.
—கு.பாலமுருகன்