தமிழகம்செய்திகள்

செங்கம் அருகே சாலையில் சாய்ந்த புளியமரம் – போக்குவரத்து பாதிப்பு!

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே பெரிய புளியமரம்
சாய்ந்ததால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது – இதனால்
வாகனங்கள் சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரம் அணிவகுத்து நின்றன.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த காயம்பட்டு கூட்ரோடு பகுதி தேசிய நெடுஞ்சாலையில், திடீரென பெரிய புளியமரம் வேறோடு சாய்ந்ததால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால், தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரம் வரையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

மேலும், வாகனங்கள் ஒன்றோடு ஒன்று முன்னேற முயன்றதால், கடும் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. சம்பவம் அறிந்து வந்த செங்கம் காவல் நிலைய உளவு பிரிவு காவலர் செந்தில், தனி ஆளாக நின்று போக்குவரத்தை சரி செய்தார். தொடர்ந்து, போக்குவரத்தை சரி செய்த காவலருக்கு, வாகன ஓட்டிகளிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

—-கு. பாலமுருகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

‘மிதிலி’ புயல் வங்கதேச கடலோரப் பகுதிகளில் இன்றிரவு கரையை கடக்க வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

Web Editor

பிரம்மாண்டமாக நடைபெற்ற நியூஸ் 7 தமிழின் “தங்கத் தாரகை” விருது வழங்கும் விழா

Web Editor

ஆன்லைன் ரம்மி; தமிழ்நாடு டிஜிபி எச்சரிக்கை

G SaravanaKumar

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading