உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக பாஜக மாவட்ட தலைவர்களுடன் அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை நாளை ஆலோசனை மேற்கொள்கிறார்.
தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதுதொடர்பாக பாஜக மாவட்ட தலைவர்களுடன் அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை நாளை ஆலோசனை மேற்கொள்கிறார்.
நாளை காலை 10 மணிக்கு பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜக மாநில தலைவராக அண்ணாமலை பொறுப் பேற்ற பின் நடைபெறும் கூட்டத்தில், உள்ளாட்சித் தேர்தல் மட்டுமின்றி, கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது.







