மணிப்பூரில் கலவரத்தை பாஜக தடுக்கவில்லை ஆனால் அங்குள்ள விளையாட்டு
வீரர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக தமிழகத்திற்கு அழைத்து வந்து பயிற்சி அளித்து வருகிறது தமிழக அரசு இதுதான் திராவிடத்திற்கும் ஆரியத்திற்கும் உள்ள வித்தியாசம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக இளைஞரணி மாநில மாநாடு சேலத்தில் நடைபெற உள்ளது. அதற்காக இளைஞர் அணி மற்றும் தொண்டர்களை அழைக்கும் வண்ணம் புதுக்கோட்டையில் இளைஞர் அணி செயலாளர் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில இளைஞர் அணி செயலாளரும் தமிழக விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யா மொழி, ரகுபதி, மெய்ய
நாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதில் மாநாட்டு நிதியாக ஒரு கோடி ரூபாய் வழங்கப்பட்டது. நிதியை அமைச்சர் ரகுபதி உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கினார். இதில் பேசிய அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்ததாவது..
திமுக விழாக்களில் பட்டாசு வெடிக்க வேண்டாம் என வேண்டுகோள்
விடுத்துருந்தேன், அதனை முதலில் நிறைவேற்றிய மாவட்டமாக புதுக்கோட்டை
திகழ்கிறது. இந்தியாவிலே முதன் முதலில் இளைஞர்களுக்கு என்று ஒரு அணி தொடங்கிய கட்சி திமுக. புதுக்கோட்டை எப்போதுமே திமுகவின் கோட்டையாக திகழ்கிறது.
வாடிவாசலுக்கும், நெடுவாசலுக்கும் பெயர் போன மாவட்டம் தான் புதுக்கோட்டை.
மு.க.ஸ்டாலின் உழைப்பின் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வராகியுள்ளார், மற்றவர்களை போல் குறுக்கு வழியில் முதல்வரானவர் அல்ல.
வருகிற டிசம்பர்-17 அன்று இளைஞர் அணியின் இரண்டாவது மாநில மாநாடு சேலத்தில் நடைபெறுகிறது. இதில் திமுக அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் இளைஞர் அணி நிர்வாகிகள் மாநாட்டில் பங்கேற்க வேண்டும், சேலம் மாநாடு வெற்றி மாநாடாக அமைய வேண்டும்.
மணிப்பூரில் கலவரத்தை தடுக்க தவறியது பாஜக ஆனால் மணிப்பூரில் உள்ள விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெற வேண்டும் என்று அவர்களை தமிழகத்திற்கு பயிற்சி எடுக்க வருமாறு அவர்களை முதல்வர் அழைத்திருந்தார். அதன்படி 18 விளையாட்டு வீரர்கள் தமிழ்நாட்டில் வந்து பயிற்சி பெற்று வருகின்றனர். இதுதான் திராவிடத்திற்கும் ஆரியத்துக்கும் உள்ள வேறுபாடு.
மோடியின் 9 ஆண்டுகால ஆட்சியில் வாழ்ந்தது அவரது நண்பர் அதானி ஒருவர் தான்,
உலக பணக்கார் பட்டியலில் 2 ஆவது இடத்தில் அதானி இருக்கிறார். சிஏஜி அறிக்கையின் மூலம் மோடியின் 9 ஆண்டுகால மோசடிகள் வெளிவர தொடங்கியுள்ளது. கொரோனா காலகட்டத்தில் பிரதமர் பி எம் கேர் ஃபண்டு என்று தொடங்கி பல்லாயிரம் கோடி ரூபாய் நிதி திரட்டினார். அதற்காக கணக்கு கேட்டால் அதனை தர மறுக்கின்றனர்
அதிமுக-பாஜக கட்சிகளை ஒழிக்கும் நேரம் தான் வருகின்ற நாடாளுமன்ற தேர்தல். பாஜகவை விரட்ட வேண்டுமென்றால் அதிமுகவை ஒழிக்க வேண்டும். அதிமுகவை ஒழிப்பதற்காக தான் சேலத்தில் இளைஞர் அணி மாநாடு நடைபெற உள்ளது “ என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.