தமிழறிஞர் மறைமலை அடிகள் பிறந்தநாள் – முதலமைச்சர் ஜோசப் விஜய் புகழஞ்சலி!

தமிழ்ச் சமூகத்திற்கு என்றும் உந்துசக்தியாகத் திகழும் மறைமலை அடிகளின் புகழ் என்றும் நிலைத்தோங்கட்டும் என்று முதலமைச்சர் ஜோசப் விஜய் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை, தமிழறிஞர் மறைமலை அடிகள் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு எனது தனித்தமிழ் புகழ் வணக்கங்கள்.

தமிழ், வடமொழி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஆழ்ந்த புலமை பெற்றிருந்த போதிலும், தமிழின் இயல்பும் இனிமையும் குன்றாமல் வளர வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன், தமிழில் பிறமொழிக் கலப்பின்றி எழுதும் வழக்கத்தைத் தொடங்கி, தலைமுறைகளுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்தவர் மறைமலை அடிகள் அவர்கள்.

தனது மொழிப்பற்று, தமிழார்வம், சிந்தனைகளால் தமிழ்ச் சமூகத்திற்கு என்றும் உந்துசக்தியாகத் திகழும் மறைமலை அடிகளின் புகழ் என்றும் நிலைத்தோங்கட்டும்”! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.