நியூஜெர்சியில் ஒருவர், மாற்றுத்திறனாளி மாணவர்கள், சிறப்பு தேவைகள் கொண்ட குழந்தைகளுக்கு இலவசமாக முடி திருத்தம் செய்யும் பணியை சேவையாக செய்து வருவது பலரது பாராட்டை பெற்றுள்ளது மட்டுமின்றி அவரது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மாற்றுத்திறனாளிகள், சிறப்பு தேவைகள் கொண்ட குழந்தைகள் மீது கூடுதல் அக்கறையும் பராமரிப்பும் என்பது 24 மணி நேரமும் தேவைப்படுகிறது. இன்றைய சமூகத்தில் அவர்களுக்கான மனப்பூர்வ ஆதரவை அளிப்பவர்கள் மிகவும் குறைவானவர்களே என்று கூறலாம். அந்த வகையில், அமெரிக்காவில் நியூ ஜெர்சி மாகாணத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள @yourkindofcuts என்ற ஆண்கள் அழகு நிலையத்தில் அதாவது முடி திருத்தும் கடையில் மாற்றுத்திறனாளி மாணவர்கள், சிறப்பு தேவைகள் கொண்ட குழந்தைகளுக்கு இலவசமாக முடி திருத்தம் செய்யும் பணியை பில்லி என்பவர் மேற்கொண்டு வருகிறார். இவர் குழந்தைகளுக்கு மட்டுமல்ல ஆண்கள், பெண்கள் என அனைவருக்கும் முடித்திருத்தம் செய்து வருகிறார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பொதுவாக நல்ல ஆரோக்கியத்தோடு இருக்கும் குழந்தைகளுக்கு முடி வெட்டுவது என்பதே கடினமான ஒன்று. இதனை ஒவ்வொரு பெற்றோரும் நன்கு உணர்ந்திருப்பர். அப்படிப்பட்ட நிலையில் பில்லி தனது பார்பர் ஷாப்பில் அதாவது முடிதிருத்தும் கடையில் சிறப்பு குழந்தைகளுடன் விளையாடிக்கொண்டு, அவர்களுக்கு தேவையான விளையாட்டு பொருட்களை கையில் கொடுத்து அவர்களை திசை திருப்பி முடி திருத்தம் செய்கிறார். அப்போது அவருக்கும் , சிறப்புத் தேவையுடைய குழந்தைக்கும் இடையேயான உரையாடலைக் காட்டும் வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டது. இந்த வீடியோ பார்ப்பவர்கள் பலரையும் உணர்ச்சிவசப்பட வைத்துள்ளது.
அந்த வீடியோவில், நாற்காலியில் அமர்ந்திருக்கும் சிறுவன் முன்பு பில்லி நின்று முடியை வெட்ட முயற்சிக்கிறார். ஆனால் அந்த சிறுவன் தனது முடியை வெட்ட விடாமல் கத்தி அழுகிறார். பின்னர் பில்லி அந்த சிறுவனை சமாதானப்படுத்தி பொறுமையாக, கவனமாக, மெதுவாக சிறுவனின் முடியை வெட்டுகிறார். வீடியோவின் முடிவில், அவரும் அந்தச் சிறுவனைக் கட்டிப்பிடித்து ஹை-ஃபைவ் கொடுக்கிறார்.
இந்த வீடியோ ஒரு நாள் முன்பு பகிரப்பட்டது. பகிரப்பட்டதிலிருந்து, இது வைரலாகி 16 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைக் குவித்துள்ளது. இது தவிர இந்த வீடியோ பலராலும் ஷேர் செய்யப்பட்டு ஏராளமான லைக்குகளையும், கமெண்ட்களையும் பெற்றுள்ளது. ஒரு சிலர் முடிதிருத்தும் முறை தவறானது என்று தங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டுள்ளனர். மற்றும் சிலர் பில்லி குழந்தைகளை அற்புதமாக கையாண்டு முடிவெட்டும் விதம் சூப்பர். எங்கள் மகனின் பார்பர் உண்மையிலேயே ஒரு சிறந்த மனிதர் அவர் என்று பாராட்டியும் உள்ளனர்.
மேலும் ஒரு பயனர் நீங்கள் ஒரு பெற்றோர். குடும்ப உறுப்பினர் அல்லது நண்பர் இல்லையென்றால் சிறப்புத் தேவைகள் உள்ள குழந்தைகளை கையாள்வது எவ்வளவு கடினமானது என்பதை அனுபவித்திருந்தால் மட்டுமே உணர முடியும். அப்படிப்பட்ட ஒரு சிறுவனை பில்லி கையாண்ட விதம் மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. உண்மையிலேயே பில்லி பாராட்டுக்குரியவர் என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு பயனர் நான் இதைப் பார்க்கும் வரை நான் மிகவும் பொறுமையானவன் என்று நினைத்தேன். அவருடன் ஒப்பிடும்போது எனக்கு யாரும் இல்லை என்பதை உணர்ந்தேன், ”என்று கூறியுள்ளார்.
பில்லியன் இந்த சிறப்பு செயலுக்காக The North Ward Center- இருந் நம்பிக்கை நாயகன் என்ற விருது கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி அன்று வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .
- பி.ஜேம்ஸ் லிசா