கர்நாடகாவில் கடன் தர மறுத்த வங்கிக்கு தீ வைத்த நபரை போலீசார் கைது செய்தனர்.
கர்நாடகா மாநிலம் ஹாவேரி மாவட்டத்தில் உள்ள பாதாகி பகுதியிலுள்ள கனரா வங்கிக்கிளையில், ரட்டிஹள்ளி கிராமத்தை சேர்ந்த வாசிம்முல்லா என்பவர் கடன்கேட்டு விண்ணப்பம் அளித்துள்ளார். இவரது மனுவை பரிசீலனை மேற்கொண்ட வங்கி மேலாளர், மனுவை தள்ளுபடி செய்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனால், ஆத்திரமடைந்த வாசிம்முல்லா, நள்ளிரவில் ஜன்னல் வழியாக வங்கியினுள் பெட்ரோலை ஊற்றி தீ வைத்ததாக கூறப்படுகிறது. இதில் வங்கியிலிருந்த 16 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமுற்றது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், வாசிம்முல்லா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
வாசிம்முல்லா என்பவரின் இந்த கொடூர செயலை கண்டித்து, சமூக வலைத்தள பக்கங்களில் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். அதேநேரத்தில், கேலி மீம்களையும் பதிவிட்டு வருகின்றனர்.