செங்கல்பட்டில் பாலாற்று மேம்பால பணிகள் வரும் 18-ம் தேதியுடன் நிறைவு பெற்று போக்குவரத்து தொடங்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு அருகே சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பாலாற்றின் குறுக்கே
இரண்டு மேம்பாலங்கள் உள்ளது. இந்த மேம்பாலங்களில் கடந்த ஆண்டு பெய்த மழையின்
காரணமாக கடுமையான சேதங்களை சந்தித்தது. இதனால் பாலாற்றின் மேம்பாலத்தில்
அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனைத் தொடர்ந்து மேம்பாலத்தை சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்டு கடந்த பிப்ரவரி
7ஆம் தேதி முதல் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தன. இதனால் சென்னை திருச்சி
தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனங்கள் கிராமப்புற சாலைகளில் திருப்பி
விடப்பட்டன. இந்நிலையில் இரண்டு பாலங்களில் ஒரு பாலம் சீரமைக்கப்பட்டு அதில்
ஒரு வழியாக மட்டும் போக்குவரத்து செயல்பட்டு வந்தது.
இரண்டாவது பாலத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில்
பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் ஏ.வ.வேலு ஆய்வு
மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், மேம்பாலங்கள்
கடுமையாக சேதமடைந்த நிலையில் சீரமைப்பு பணிகள் துரிதமாக நடைபெற்று
வருவதாகவும், மூன்று ஷிப்ட் களின் அடிப்படையில் பாலப் பணிகள் நடைபெற்று
வருவதாக தெரிவித்தார். மேலும் ஒரு பாலத்தில் சீரமைப்பு பணிகள் நிறைவு பெற்று
போக்குவரத்து துவங்க பட்டுள்ளதாகவும், மற்றொரு பாலத்தில் நடைபெற்று வரும்
பணிகள் வரும் 18ஆம் தேதியுடன் நிறைவு பெற்று போக்குவரத்து துவங்கப்படும் என
தெரிவித்தார்.