2016ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டுவரையிலான காலகட்டத்தில் சிறந்து விளங்கிய மாவட்ட ஆட்சியர்களுக்கான விருதுகளை தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
தமிழ்நாடு சுகாதாரத்துறை திட்டங்களை சிறப்பான முறையில் செயல்படுத்திய மாவட்ட ஆட்சியர்களுக்கு விருதை தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
- அதன்படி, 2016 – 17 ஆம் ஆண்டில் விருதுநகர் மாவட்ட ஆட்சியராக இருந்த சிவஞானத்திற்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
- 2017-18 ஆம் ஆண்டில் திருவாரூரில் ஆட்சியராக இருந்த நிர்மல் ராஜுக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
- 2018 – 2019ம் ஆண்டிற்கான விருதை சிவகங்கை மாவட்ட ஆட்சியராக இருந்த ஜெயகாந்தன் பெருகிறார்
- 2019- 20 ஆண்டுக்கான விருதை விருதுநகர் ஆட்சியர் சிவஞானம் பெறுகிறார்
- 2020 – 21 ஆம் ஆண்டுக்கான விருது திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக இருந்த கந்தசாமி பெறுகிறார்.







