புதுக்கோட்டையில் கொலை முயற்சியில் ஈடுபட்ட இளைஞர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
புதுக்கோட்டை நகர காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியைச்
சேர்ந்த விஜய் . இவர் சந்தைப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர். விஜய் தொடர்ச்சியாக அந்தப் பகுதியில் இருக்கும் அச்சுருத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் அப்பகுதியில் இருக்கும் இளைஞரை விஜய் கொலை செய்ய முயற்சி செய்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து போலீஸார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாக அப்பகுதி மக்கள் காவல் துறையில் புகார் கொடுத்ததின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு கைது செய்யப்பட்ட விஜயை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட கிளைச் சிறையில் இருந்த விஜய், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.