ஆதீனங்கள் தமிழ் மற்றும் சைவத்தை வளர்த்து வருகின்றன என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் ஸ்ரீ அமிர்த கடேஸ்வரர் கோவிலில் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சாமி தரிசனம் செய்தார். அவருக்கு ஆலய நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை வரவேற்பு அளிக்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் கோயில் கொடிமரத்தின் அருகே அமைச்சர் கோ பூஜை, மற்றும் கஜ பூஜை செய்து வழிபட்டார். தொடர்ந்து கள்ள விநாயகர் சுவாமி, அமிர்தகடேஸ்வரர், காலசம்ஹாரமூர்த்தி மற்றும் அபிராமி சன்னதிகளில் சிறப்பு தரிசனம் செய்தார். இதில் இந்து சமய அறநிலைத்துறை கூடுதல் ஆணையர் இரா. கண்ணன் உள்ளிட்ட துறை அதிகாரிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர்.
இதனைதொடர்ந்து அமைச்சர் சேகர் பாபு தருமபுரம் ஆதீனத்தில் 27 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியை துவக்கி வைத்தார். பின்னர் தருமபுர ஆதீனம் 27வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, பழமையான ஆதீனங்கள் தமிழ் மற்றும் சைவத்தை வளர்த்து வருகின்றன. ஆதீனங்களின் பாரம்பரிய நிகழ்ச்சிகளில் இந்து அறநிலையதுறை தலையிடாது என்றும் கூறினார்.
மேலும், தீட்சிதர்களுக்கு இடையே உள்ள பிரச்சனைகள், பக்தர்கள் தரிசனம் செய்வது தொடர்பான பிரச்சனைகள் என ஏராளமான புகார்கள் வந்துள்ளது. அந்த புகார்கள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று கடிதம் அனுப்பியுள்ளோம், இத்திருக்கோயிலை இந்து சமய அறநிலையத்துறை ஏற்கும் என நாங்கள் எங்கும் குறிப்பிடவில்லை என்று தெரிவித்தார்.