கர்நாடகத்தில் இன்று காலை 7மணிக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.
கர்நாடகாவில் இன்று சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மே 13 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 113 இடங்களை பிடிக்கும் கட்சியே ஆட்சியை பிடிக்கும். தேர்தல் நெருங்கிய நிலையில் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டன.
இந்தியா முழுவதும் உற்று நோக்கும் இந்த தேர்தலுக்காக, தமிழ்நாட்டிலிருந்தும் அரசியல் கட்சித் தலைவர்கள் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இதனையடுத்து கடந்த 8ம் தேதியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவுபெற்றது.
இந்த நிலையில் இன்று காலை சரியாக 7மணிக்கு வாக்குப்பதிவு தொடங்க உள்ளது. வாக்குப்பதிவை முன்னிட்டு தேர்தல் ஆணையம் அனைத்து ஏற்பாடுகளை யும் தீவிரப்படுத்தி உள்ளது. தொகுதிக்கு தொடர்பு இல்லாத வெளிமாநில நபர்கள் வெளியேறும்படி தேர்தல் ஆணையம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.
வாக்கு சேகரிப்பு மையங்களும் தயார் நிலையில் உள்ளன. இந்த தேர்தலில், பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் என மொத்தம் 2,615 வேட்பாளர்கள் களத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.







