இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்க்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் 2022 ஆசிய கோப்பைக்கான இடைக்கால தலைமை பயிற்சியாளராக VVS லக்ஷ்மண் நியமிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி வருகின்ற 27ஆம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் துவங்க உள்ளது. அதன் மறுநாள் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கக்கூடிய இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி நடைபெற உள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் ஆசிய கோப்பை போட்டியில் பங்கேற்க உள்ள அணிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்க்கு சென்றுள்ள நிலையில் இந்திய கிரிக்கெட் அணி நேற்று பெங்களூரில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ்க்கு புறப்பட்டு சென்றது. முன்னதாக அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா தொற்று பரிசோதனையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.
இதனால் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு இந்தியா அணியின் பயிற்சியாளராக யாரை நியமனம் செய்வது என்ற கேள்வி எழுந்த நிலையில் 2022 ஆசிய கோப்பை போட்டிக்கு இந்திய அணியின் இந்திய அணியின் முன்னாள் வீரர் வி.வி.எஸ் லட்சுமணனை இடைக்கால பயிற்சியாளராக நியமனம் செய்து பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது.
டிராவிட்டுக்கு கொரோனா பரிசோதனயில் நெகட்டிவ் வரும் வரை வி.வி.எஸ் லட்சுமணன் பயிற்சியாளராக தொடர்வார். மீண்டும் பரிசோதிக்கும் போது நெகட்டிவ் வரும் பட்சத்தில் டிராவிட் அணியோடு இணைந்துகொள்வார் என்று கூறப்பட்டுள்ளது.
வி.வி.எஸ் லட்சுமணன் ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடர்களில் இந்திய அணிக்கு பயிற்சியாளராக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.