ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இலங்கையின் கொழும்புவில், 16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 30-ம் தேதி தொடங்கியது. இந்நிலையில், இறுதி போட்டியில் நடப்பு சாம்பியனான இலங்கை அணியும், இந்திய அணியும் மோத உள்ளன.
கொழும்புவில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இறுதி போட்டியில், கோப்பையை தக்க வைக்கும் முயற்சியில் இலங்கை வீரர்களும், 8-வது முறையாக சாம்பியனாகும் முனைப்பில் இந்திய வீரர்களும் மோத உள்ளனர். எனவே இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.







