‘சிஷ்யர்களில் ஒருவனாக பட்டினப் பிரவேசத்தில் நானும் பங்கேற்பேன்’ என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘தமிழக மக்களின் ஆதங்கத்தை உணர்ந்து தருமபுர ஆதீனம் பட்டினப் பிரவேசத்தில் பல்லக்குத் தூக்க விதிக்கப்பட்ட தடை நீங்கவுள்ளதாக அறிந்தேன். தமிழக மக்களின் குரலாகவும், அவர்களின் கோரிக்கைக்கு ஆதரவாகவும், உறுதுணையாகவும், பாஜக என்றும் மக்களோடு இருக்கும். மேலும், இந்த விழாவில் தீயசக்திகளால் எந்தவித இடையூறும் ஏற்படாமல் இருக்க பாஜக துணை நிற்கும். சிஷ்யர்களில் ஒருவனாக இந்த விழாவில் நானும் பங்கேற்பேன்’ என தெரிவித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதற்கு முன்பு, பட்டினப் பிரவேசத்திற்கு அனுமதி அளிக்கக் கோரி தருமபுரம், குன்றக்குடி, மயிலம் உள்ளிட்ட ஆதீனங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேற்று சந்தித்து வலியுறுத்தினர். அதனைத்தொடர்ந்து இன்று மயிலாடுதுறை குத்தாலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தருமபுரம் ஆதீனம், பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியை நடத்த அரசு அனுமதி அளித்துள்ளதாக கூறினார்.
அண்மைச் செய்தி: ‘கோவையில் துவங்கியது “பட்டறை – 2022” ஒருநாள் பயிற்சி முகாம்’
மரபுப்படி பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியை நடத்த முதலமைச்சர் வாய்மொழி உறுதி அளித்துள்ளதாகவும் தெரிவித்தார். யாரையும் கட்டாயப்படுத்தி பல்லக்கு சுமக்கச் சொல்லவில்லை என்றும், குரு – சிஷ்ய உறவுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்த முதலமைச்சருக்கு நன்றி எனவும் அவர் தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.