முக்கியச் செய்திகள்இந்தியா

மதுபான கொள்கை வழக்கில் ஜாமீன் கோரி அரவிந்த் கெஜ்ரிவால் மனு!

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் ஜாமீன் கோரி டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மனுத்தாக்கல் செய்துள்ளார். 

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் அந்த மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மார்ச் 21-ம் தேதி கைது செய்யப்பட்டார்.  அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்திருந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.  இதனிடையே, தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக இடைக்கால ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதனை விசாரித்த உச்ச நீதிமன்றம்,  தேர்தல் பரப்புரைக்காக ஜூன் 1  வரை இடைக்கால ஜாமின் வழங்கியது.  மேலும் ஜூன் 2-ம் தேதி ஆஜராகும்படி உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து இந்த ஜாமீனை மேலும் ஏழு நாட்களுக்கு நீட்டிக்க கோரி மனுத்தாக்கல் செய்தார். இந்த ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.

நாளை மறுநாளோடு கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமீன் முடிவடைய உள்ள நிலையில், தற்போது மீண்டும் டெல்லி ரோஸ் அவென்யு நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார்.  ஜாமீன் கோரி விசாரணை நீதிமன்றத்தை நாடலாம் என உச்சநீதிமன்றம் கூறியிருந்த நிலையில் தற்போது மனுத்தாக்கல் செய்துள்ளார்.  இந்த மனு இன்று பிற்பகல் 2 மணிக்கு விசாரணைக்கு வர உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

ராஷ்மிகாவின் போலி வீடியோ விவகாரம் – டெல்லி காவல்துறைக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்..!

Jeni

மழையில் பிளாஸ்டிக் கவரால் மூடிக்கொண்டு தவித்த மூதாட்டி; காப்பாற்றிய பெண் போலீஸ்

Halley Karthik

‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு அல்கராஸ், ஜோகோவிச் நடனமாடும் வித்யாசமான போஸ்ட்டரை வெளியிட்ட விம்பிள்டன்!!

Web Editor

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading