பிரசித்தி பெற்ற சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் ராஜகோபுர கும்பாபிஷேகம் நடைபெற்று ஓராண்டு நிறைவு பெற்றதையடுத்து, பம்பை மேளதாளம் முழங்க வெள்ளி காமதேனு வாகனத்தில் திரு வீதி உலா நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் அமைந்துள்ள மாரியம்மன் திருக்கோயில் சக்தி ஸ்தலங்களில் முதன்மையானதும் வேண்டும் வரம் தரும் நினைத்த காரியம் நிறைவேறும் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலம். இத்திருக்கோயிலில் ராஜகோபுர கும்பாபிஷேக விழா நடைபெற்று ஒராண்டு நிறைவடைந்ததையடுத்து “வருடாபிஷேக விழா நடைபெற்றது.
இதில் அருள்மிகு உற்சவ மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து உற்சவ மாரியம்மன் வெள்ளி காமதேனு வாகனத்தில் எழுந்தருளினார். சிறப்பு பூஜைகளுக்கு பிறகு “பம்பை மேளதாளம் முழங்க வெள்ளி காமதேனு வாகனத்தில் திரு வீதி உலா நடைபெற்றது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ரூபி.காமராஜ்