காஷ்மீருக்குள் ஊடுருவ சுமார் 140 பயங்கரவாதிகள் தயாராக இருப்பதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு இந்தியா – பாகிஸ்தான் இடையே கடும் பதற்றம் நிலவிவந்தது. இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் இரு நாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொண்டன. இந்த ஒப்பந்தம் அமலில் இருந்தாலும், ஜம்மு காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில், சுமார் 140 பயங்கரவாதிகள் பாகிஸ்தான் பகுதியில் இருந்து ஊடுருவ தயார் நிலையில் உள்ளனர்.
இதை இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானில் இருந்து 140 பயங்கரவாதிகள் ஊடுருவ தயாராக இருப்பதை ராணுவம் கவனித்து வருகிறது என்றும் பயங்கர தாக்குதல் நடத்த உயரமான பகுதிகளில் அவர்கள் பதுங்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் கடந்த காலங்களிலும் இதுபோன்று ஊடுருவ முயன்றார்கள் என்றும் ஆனால், நமது வீரர்கள் அதை முறியடித்ததாகவும் தெரிவித்த பாதுகாப்பு அதிகாரிகள், இந்த போர் நிறுத்த காலத்தை , பாகிஸ்தான் எல்லைப்பகுதிகளில் பாதிப்படைந்த உள் கட்டமைப்பு பணிகளை மேம்படுத்த பயன்படுத்திக் கொள்வதாகத் தெரிவித்துள்ளனர்.









