தமிழகத்தில் நெல் கொள்முதல் காலத்தை ஒரு மாதத்திற்கு முன்னதாகவே அதாவது 2022-23 ம் ஆண்டிற்கான கரீப் சந்தைப் பருவ காலமான 01.09.2022 முதல் துவங்க ஒப்புதல் கிடைக்கப் பெற்றுள்ளதாக திமுக எம்.பி.யான பி.வில்சன் தெரிவித்தார்.
இதுகுறித்து திமுக நாடாளுமன்ற மாநிலங்களவை எம்.பி. வில்சன் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பல்வேறு பதிவுகளில் கூறப்பட்டுள்ளதாவது:
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தமிழகத்தில் நெல் கொள்முதலை 2022 அக்டோபருக்கு பதிலாக 2022 செப்டம்பரில் முன்கூட்டியே துவங்க வேண்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம் தனது அமைச்சகத்திற்கு கிடைக்கப்பெற்றதாக மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.
நான் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையில் இதனை அவர் தெரிவித்தார். மேலும், 18.07.2022 அன்றைய ஒன்றிய அரசின் கடிதம் மூலம் தமிழகத்தில் நெல் கொள்முதல் காலத்தை ஒரு மாதத்திற்கு முன்னதாகவே அதாவது 2022-23 ம் ஆண்டிற்கான கரீப் சந்தைப் பருவ காலமான 01.09.2022 முதல் துவங்க ஒப்புதல் அளித்துள்ளது.
குறைந்தபட்ச ஆதார விலை தொடர்பான என்னுடைய மற்றொரு கேள்விக்கு பதில் அளித்துள்ள அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ஒரு குறிப்பிட்ட பயிரை விதைப்பதற்கு விவசாயிகள் முன்னதாகவே முடிவெடுக்கும் வகையில், விதைப்புப் பருவத்திற்கு முன்னதாகவே 2022-23 ம் ஆண்டின் சந்தைப்படுத்தல் பருவத்திற்கான காரிப் பயிர்களின் குறைந்தபட்ச ஆதார விலை 08.06.2022 அன்றே அறிவிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார் என்று திமுக மாநிலங்களவை எம்.பி.யான பி.வில்சன் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.