தமிழ்நாடு அரசின் திட்டங்களை செயல்படுத்தவும் கண்காணிக்கவும் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்!

தமிழ்நாடு அரசின் திட்டங்களை செயல்படுத்தவும் கண்காணிக்கவும் 3 மாவட்டங்களுக்கு  ஐஏஎஸ் அதிகாரிகளை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு அரசின் திட்டங்களை முறையாக செயல்படுத்தி பொதுமக்களுக்கு அரசின் சேவைகள் அனைத்தும் சென்றடைவதை…

தமிழ்நாடு அரசின் திட்டங்களை செயல்படுத்தவும் கண்காணிக்கவும் 3 மாவட்டங்களுக்கு  ஐஏஎஸ் அதிகாரிகளை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ்நாடு அரசின் திட்டங்களை முறையாக செயல்படுத்தி பொதுமக்களுக்கு அரசின் சேவைகள் அனைத்தும் சென்றடைவதை உறுதி செய்ய பல்வேறு முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

அதன்படி 3 மாவட்டங்களில் திட்டங்களை செயல்படுத்தவும் கண்காணிக்கவும் ஐஏஎஸ் அதிகாரிகளை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு அர்ச்சனா பட்நாயக், திருப்பத்தூர் மாவட்டத்திற்கு நந்தகோபால் , திருப்பூர் மாவட்டத்திற்கு ரீட்டா ஹரிஷ் தாக்கர் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள், மாவட்டத்தில் குடிமராமத்து, சாலை மேம்பாடு, ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை கண்காணித்து திட்டங்களை செயல்படுத்துவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.