அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தர் சூரப்பா மீதான விசாரணை ஆணையத்திற்கு நீட்டிப்பு கோர முடிவு செய்யப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலையின் துணை வேந்தராக சூரப்பா பதவியேற்று, 3 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. இவரது நிர்வாகத்தில் டெண்டர், தேர்வு நடைமுறை, பேராசிரியர், பணியாளர் நியமனம் மற்றும் பதவி உயர்வு போன்றவற்றில் முறைகேடு நடந்ததாக புகார்கள் எழுந்ததாகக் குறிப்பிட்டு, அதனை விசாரிக்க கலையரசன் தலைமையிலான ஆணையம் அமைக்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மூன்று மாதத்திற்குள் ஆணையம் தனது விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. இதனிடையே சூரப்பா அப்பழுக்கற்றவர் என தமிழக அரசுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கடிதம் எழுதியதாகவும் தகவல்கள் வெளியாகின. கமல்ஹாசனும் சூரப்பாவிற்கு ஆதரவு தெரிவித்தார். எனினும் எதிர்க்கட்சிகள் சூரப்பாவை இடைநீக்கம் செய்து விசாரிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தன.
இந்த நிலையில் ஆணையத்தின் அவகாசம் வரும் 11ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், கால நீட்டிப்பு கோர விசாரணை ஆணையம் முடிவு செய்துள்ளது. துணைவேந்தர் சூரப்பா உள்ளிட்ட சில அதிகாரிகளிடம் மேலும் விசாரணை செய்ய வேண்டியிருப்பதால் கால நீட்டிப்பு கோருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.