அண்ணா பல்கலைகழக துணைவேந்தர் சூரப்பா நேர்மையானவர் என விசாரணை அதிகாரி கலையரசனுக்கு அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் கூட்டமைப்பு கடிதம் எழுதியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தா் சூரப்பா முறைகேடு செய்ததாக புகார்கள் எழுந்தன. இதைத் தொடா்ந்து சூரப்பா மீதான புகார்கள் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் தமிழக அரசு விசாரணைக் குழுவை அமைத்தது.
3 மாதங்களில் இந்த விசாரணைக்குழு அறிக்கை அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் சூரப்பாவிற்கு ஆதரவாக விசாரணை அதிகாரி கலையரசனுக்கு அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் கூட்டமைப்பு கடிதம் எழுதியுள்ளது. அதில் அண்ணா பல்கலைக்கழக நிர்வாகத்தில் அரசியல் தலையீடு, இடைத்தரகர்களின் தலையீட்டை முடிவுக்கு கொண்டு வந்தவர் சூரப்பாதான் என்று கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊழலற்ற பல்கலைக்கழகமாக அண்ணா பல்கலைக்கழகத்தை மாற்றியவர் சூரப்பா எனக் தெரிவித்துள்ள அந்த கூட்டமைப்பு, உண்மையில், ஊழல் எங்கு நடைபெற்றது என்று உரிய முறையில் விசாரிக்க வேண்டும் என விசாரணை அதிகாரி கலையரசனுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.







